Pages

Tuesday, August 16, 2011

காளமேகப் புலவர் பாடல்கள்

நிந்தா ஸ்துதிகள்

கொங்குலவுந் தென்றில்லைக் கோவிந்தக் கோனிருக்க
கங்குல் பகலண்டர் பலர் காத்திருக்க செங்கையில்
ஓடெடுத்த அம்பலவ ரோங்குதில்லையுட் புகுந்தே
ஆடெடுத்த தென்ன வுபாயம்

நாட்டுக்கு ளாட்டுக்கு நாலுகா லய்யா நினஅ
ஆட்டுக் கிரண்டு காலானாலும் நாட்டமுள்ள
சீர்மேவு தில்லைச் சிவனே யிவ்வாட்டை விட்டுப்
போமா சொல் லாயப்புலி

பொன்னஞ்சடை யறுகம்புல்லுக்கும் பூம்புனற்கும்
தன்நெஞ்சுவகையுறத் தாவுமே அன்னங்கள்
செய்க்கமலத் துற்றுலவும் தில்லை நடராசன்
கைக்கமலத் துற்ற மான்கன்று

மாட்டுக் கோன் தங்கை மதுரை விட்டுத் தில்லைவனத்
தாட்டுக் கோனுக்குப் பெண்டாயினாள் கேட்டிலையோ
குட்டி மறிக்கவொரு கோட்டானையும் பெற்றாள்
கட்டுமணிச் சிற்றிடைச்சி காண்.

நச்சரவம் பூண்ட தில்லை நாதரே! தேவரீர்
பிச்சை எடுத்துண்ணப் புறப்பட்டும் – உச்சிதமாம்
காளமேன் குஞ்சரமேன் கார்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராஜாங்கமேன்?

தாண்டி யொருத்தித் தலையின்மே லேறாளோ
பூண்ட செருப்பா லொருவன் போடானோ மீண்டொருவன்
வையானோ வின் முறிய மாட்டானோ தென்புலியூர்
ஐயாநீர் ஏழையா னால்

செல்லாரும் பொழில்சூழ் புலியூ ரம்பலவாண தேவனாரே
கல்லாலும் வில்லாலும் செருப்பாலும் பிரம்பாலும் கடிந்து சாடும்
எல்லாரும் நல்லவரென்றிரங்கி யருளீந்ததென்ன இகழ்ச்சியொன்றும்
சொல்லாமல் மலரைக் கொண்டெறிந்தவனைக் கொன்றதென்ன சொல்லுவீரே.

சொல்லிற் பெரிய கழுக்குன்றரே தொல்லை நாள் முதலா
அல்லற் பிழைப்பே பிழைத்து விட்டீர் முப் புரத்தவரை
வில்லைப் பிடித்தெய்ய மாட்டாமல் நீர் அந்த வேளையிலே
பல்லைத் திறந்து விட்டீர் இது காணும் படைத் திறமே.

தெருமுட்டப் பாளை சிதற வளர் பூகத்
தருமுட்டச் செய்வாளை தாவும் – திருமுட்டத்
தூரிலே கண்டேன் ஒரு புதுமை பன்றிக்கு
மாரிலே கொம்பான வாறு.

முட்டத்துப் பன்றி முளரித் திருப்பதத்தைக்
கிட்டத்துப் பன்றிக் கிடந்தோமே- தொட்ட
மருங்கிலே சங்கெடுத்த மாலே யெமக்கு
வருங்கிலே சங்கெடுக்க வா.

ஆலங் குடியானை ஆலால முண்டவனை
ஆலங் குடியானென் றார் சொன்னார் – ஆலம்
குடியானே யாயில் குவலயத் தோரெல்லாம்
மடியாரோ மண் மீதிலே.

வள்ளலெனும் பெரிய மாயூர நாதருக்கு
வெள்ளிமலை பொன்மலையு மேயிருக்கத் – தெள்ளுமையாள்
அஞ்ச லஞ்சலென்று தின மண்டையிலே தானிருக்க
நஞ்சுதனை யேனருந்தி னார்.

தீத்தானுன் கண்ணிலே தீத்தானுன் கையிலே
தீத்தானு முன் புன் சிரிப்பிலே – தீத்தானுன்
மெய்யெலாம் புள்ளிருக்கு வேளூரா உன்னையிந்த
தையலாள் எப்படிச் சேர்ந்தாள்.

அன்னவயல் சூழு மாரூர்த் தியாகேசனார்க்
கின்னம் வயிர மிருக்குமோ – முன்னமொரு
தொண்டர் மகனைக் கொன்றும் சோழர் மகனைக் கொன்றும்
சண்ட மதனைக் கொன்றும் தான்.

ஒருமாடுமில்லாமல் மைத்துனனார் புவிமுழுது முழுதேயுண்டார்
நரைமாடொன் றுமக்கிருந்து முழுதுண்ண மாடாடமல் நஞ்சையுண்டீர்
இருநாழி நெல்லுக்கா இரண்டு பிள்ளைக்கும் தாய்க்கும் இரந்தீரின்று
திருநாளுமாயிற்றோ செங்கமலைப் பதிவாழும் தியாகனாரே.

ஆடாரோ பின்னையவர் அன்பரெலாம் பார்த்திருக்க
நீடாரூர் வீதியிலே நின்று தாம் –தோடாரும்
மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர்
கைக்கே பணமிருந்தக் கால்

பாரூரறியப் பலிக்குழன்றீர் பற்றிப் பார்க்கிலுமக்
கோரூருமில்லை இருக்கவென்றா லுள்ளவூரு மொற்றி
பேரூரறியத் தியாகரென்றே பெரும்பேரும் கொண்டீர்
ஆரூரிலிருப் பீரினிப் போய்விடு மம்பலத்தே

சட்டியிலே பாதியந்தச் சட்டுவத்திலே பாதி
இட்டவிலை யிற்பாதி யிட்டிருக்கத் திட்டமுடன்
ஆடிவந்த சோணேசா வென்றழைத்த போது பிள்ளை
ஓடிவந்த தென்னா உரை

ஆடல்புரிந் தானென் றந்நாளிலே மூவர்
பாடலு வந்தானென்ற பான்மையான் கூடலிலே
நன்னரி வாசிக்கு நடைபயிற்றி னானென்றும்
கின்னரி வாசிக்கும் கிளி

கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்
பெண்டீர் தமைச் சுமந்த பித்தனார்- எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை யேறினா ராம்.

நல்லதொரு புதுமை நானிலத்தில் கண்டேன்
சொல்லவா சொ்ல்லவா சொல்லவா –செல்வ
மதுரை விக்கினேசுரனை மாதுமையாள் பெற்றாள்
குதிரை விற்க வந்தவனைக் கூடி.

மண்டலத்தில் நாளும் வைத்தியராய்த் தாமிருந்து
கண்டவினை தீர்க்கின்றார் கண்டீரோ தொண்டர்
விருந்தைப் பார்த் துண்டருளும் வேளூரெந் நாதர்
மருந்தைப் பார்த்தால் சுத்த மண்.

கண்ணனிடும் கறியும் காட்டு சிறுத் தொண்ட ரன்பிற்
பண்ணுசிறுவன் கறியும் பற்றாதோ- தண்ணிய
மட்டியையுஞ் சோலை மருதீசரே பன்றிக்
குட்டியை யேன்றீத்தீர் குறித்து.

காலையிலும் வேலை கடையக் கயிறாகும
மாலையிலும் பூ முடித்து வாழும்- சோலை செறி
செய்யிலா ரம்பையிலும் செந்துருத்தி மாநகர் வாழ்
பொய்யிலா மெய்யரிடும் பூண்.

மூப்பான் மழுவு முராரி திருச்சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ வாய்ப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ
எலி யிழுத்துப் போகின்ற தே

அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலை நீலி
செப்பரிய மாமன் உறி திருடி சப்பைக் கால்
அண்ணன் பெருவயிற னாறுமுகத் தானுக்கிங்
கென்ன பெருமை யிது

வாணியன் வாழ்த்திட வண்ணான் சுமக்க வடுகன் செட்டி
சேணியன் போற்றத் திரைப்பள்ளி முன் செல்லத் தீங்கரும்பைக்
கோணியன் வாழ்த்தக் கருமான் றுகிலினைக் கொண்டணிந்த
வேணியனாகிய தட்டான் புறப்பட்ட வேடிக்கையே.

முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிழுக்கப்
பின்னே யிருந்திரண்டு பேர் தள்ள என்னேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காதவழி.

அம்பேந்தி கையானவன் பதியிலைம் மாவைக்
கொம்பேந்தி தந்தை பணிகொண்டதோ அன்பா
அரிந்த மகவை அழையென்று சொல்லி
இருந்த வன்றன் செங்காட்டிலே.

சிலேடைகள்

ஆமணக்கு - யானை
முத்திருக்கும் கொம்பசைய மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கு நேரே குலை சாய்க்கும் எத்திசைக்கும்
தேமணக்கும் சோலைத் திருமலைராயன் வரையில்
ஆமணக்கு மால் யானையாம்.

எள் - பாம்பு
ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித் திறக்கில் முகம் காட்டும் ஓடுமண்டை
பற்றிப் பரபரவென்னும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
உற்றிடு பாம் பெள்ளெனவே ஓது

யானை - வைக்கோல்
வாரிக் களத்தடிக்கும் வந்து பின்பு கோட்டை புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் சீருற்ற
செக்கோல மேனித் திருமலைராயன் வரையில்
வைக்கோலு மால் யானையாம்

பாம்பு - எலுமிச்சைப் பழம்
பெரியவிடமே சேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணு முப்புமே லாடும் எரிகுணமாம்
தேம்பொழுயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம்

மலை - சந்திரன்
நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிநது
சிலபோதுலவுதலாற் சென்று தலை மேல்
உதித்து வரலால் உயர் மலையை
மதிக்கு நிகராக வழுத்து

தேங்காய் - நாய்
ஓடிருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலை தனக்கு நாணைது சேடியே
தீங்காய தில்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் தெரி

மீன் - பேன்
மன்னீரிலே பிறக்கும் மற்றலையிலே மேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையால் சொன்னேன் கேள்
தேனுந்து சோலைத் திருமலைராயன் வரையில்
மீனும் பேனும் சரியாமே

குதிரை -காவிரி
ஓடுஞ் சுழிசுத்த முண்டாக்குந் துள்ளலலரைச்
சாடு பரிவாய்த் தலை சாய்க்கும் நாடறியத்
தேடுபுகழாளன் றிருமலைராயன் வரையில்
ஆடுபரி காவிரியா கும்.

கீரைப்பாத்தி - குதிரை
கட்டியடிக்கையாற் கான்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் முட்டப் போய்
மாறத் திருப்புகையால் வன் கீரைப் பாத்தியும் மன்
ஏறப் பரியாகு மே

ஆடு - குதிரை
கொம்பிலையே தீனி தின்னும் கொண்டதன்மேல் வெட்டுதலால்
அம்புலியி னன்னடைய தாதலால் உம்பர்களும்
தேடுநற் சோலைத் திருமலைராயன் வரையில்
ஆடுங் குதிரையு நேராம்

துப்பாக்கி - ஓலைச் சுருள்
ஆணிவரையுறலான் குறிப்பே தரலான்
தோணக் கருமருந்து தோய்த்திடலாலால் நீணிலத்தில்
செப்பார்க் குதவாத் திருமலைராயன் வரையில்
துப்பாக்கி ஓலைச் சுருள்

பூசணிக்காய் - ஈசன்
அடிநந்தி சேர்தலால் ஆகம் வெளுத்துக்
கொடியு மொருபக்கங் கொண்டு வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காய் ஈசனெனப் போற்று

வானவில் - திருமால்
நீரிலுளதா னிறம்பச்சை யாற் றிருவால்
பாரிற் பகை தீர்க்கும் பான்மையால் சாருமனுப்
பல்வினையை மாற்றுதலால் பாரீர் பெருவான
வில் விண்டு நேர் வெற்றிலை.

சிவன் - விஷ்ணு
சாரங்கபாணி யருஞ்சக்கரத்தர் கஞ்சனை முன்
ஓரங்கங் கொய்த உகிர்வாளர் பாரெங்கும்
ஏத்திடு மையாக ரினிதாயி வரும் மைக்
காத்திடுவ ரெப்போதுங் காண்

சிவன் - கணபதி
சென்னிமுக மாறுளதால் சேர்தருமுன் னாலு கையால்
இன்னிலத்திற் கோடொன் றிருக்கையால் மன்னுகுளக்
கண்ணுதலானும் கணபதியும் செவ்வேளுக்கு
எண்ணரனு நேராவரே.

அரசன் - கண்ணாடி
யாவருக்கு மாஞ்சனை செய் தியாவருக்கு மவ்வவராய்ப்
பாவளையாய்த் தீதகலப் பார்த்தலால் ஏவும்
எதிரியைத் தன்னுள்ளாக்கி யேற்ற ரசத்தால்
சதிருறலா லாடி யரசாம்

வாழைப்பழம் - பாம்பு
நஞ்சிருக்குந் தோலிருக்கும் நாதர் முடி மேலிருக்கும்
வெஞ்சினத்திற் பற்பட்டால் மீளாதே விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்

கத்தி- பால்
காய்த்துத் தோய்த்துக் கடை.

சிட்டுக்குருவி-சிவன்
பிறப்பிறப்பிலே

யமகண்டப் பாடல்கள்
மெச்சுதிரு வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென்
இச்சையிலுன் சென்ம மியம்பவா - மச்சா கூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோமா லாமாவா வா.

பகருங்கான் மேடமிடப மிதுனங் கர்க்க
டகஞ்சிங்கங கன்னிதுலாம் விருச்சிகந்த
னுசுமகரங் கும்பமீன பன்னிரண்டும்
வசையறு மிராசி வளம்.

சிறுவளணை பயறு செந்நெல் கடுகு
மறிதிகிரி தண்டு மணிநூல் பொறியரவம்
பெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி.

வாரணங்களெட்டும் மாமேருவும் கடலும்
தாரணியும் நின்று சலித்தனவால் நாரணனைப்
பண்வாயிடைச்சி பருமத்தினா லடித்த
புண்வாயில் ஈ மொயத்த போது

ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு வேழெட்டு
ஒன்பது பத்துப் பதினொன்று பன்னி
ரண்டுபதி மூன்றுபதிநான்கு பதினைந்து பதி
னாறு பதினேழு பதினெட்டு.

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கை அடங்கும்.

நூலா நாலாயிரத்து நாற்பத் தொன்பதான்
பாலா நானூற்று நாற்பத் தொன்பான் மேலா நாறஅ
பத்தொன்பான் சங்கமறு பத்துநா லாடலுக்கும்
கர்த்தன் மதுரையிற் சொக்கன்.

நீரே பிறவா நெறிகாட்டி யாரெமக்கு
நீரே சமிசை நிலையிட்டீர் – நீரே இவ்
விங்ஙனமேன் செய்தீர் வீடுங் கடுங்காற்று மழை காட்
டுங் கடுநட்புப் பகை காட்டும்.

சுத்தபாற் கடலினடுவினிற் றூளி தோன்றிய வதிசயமது கேள்
மத்தகக் கரியையுரித்தவன் மீது மதன் பொருதழித்திடு மாற்றம்
வித்தகக் கமலை செவியுறக் கேட்டாள் விழுந்து நொந்து அயர்ந்து அழுது ஏங்கி
கைத்தல மலரால் மார்புறப் புடைத்தாள் எழுந்தது கலவையின் செந்தூள்.

ஓகாமாவீதோ டுடுடுடுடு நேரொக்க
நாகார் குடந்தை நகர்க்கிறைவனார் –வாகாய்
எடுப்பர் நடம்புரிவ ரேறுவ ரன்பர்க்கு
கொடுப்ப ரணிவர் குழைக்கு

அரையின் முடியிலணி மார்பி னெஞ்சில்
தெரிவை யிடத்தமர்ந்தான் சேவை புரையறவே
மானார் விழியீர் மலரண வொற்றிருக்கும்
ஆனாலாம் நாநீநூநே

நீறாவாய் நெற்றி நெருப்பாவாய் அங்கமிரு
கூறாவாய் மேனி கொளுந்துவாய் மாறாத
நட்டமா வாய் சோறு நஞ்சாவாய் நாயேனை
இட்டாமாய்க் காப்பா யினி

மாயன் றுயின்றதுவும் மாமலராள் சொல்லதுவும்
ஏய குருந்திற் கொண்டேறியதும் தூயை
இடப்பாகன் சென்னியின் மேலேறியதும் பச்சை
வடம் பாகு சேலை சோமன்

வாதமண ரேறியது மாயன் றுயின்றதுவும்
ஆதி தடுத்தாட் கொண்ட அவ்வுருவும் சீதரனார்
தாள் கொண் டளந்ததுவும் தண்கச்சிக் காவலா
கேள் செங்கழுநீர்க் கிழங்கு

செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும வேலன்
பொருப்புக்கு நாய்களைப் புல்ல மருப்புக்குத்
தண்டன் பொழிந்த திருத்தாமரை மேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமாறே.

உடுத்ததுவும் மேயத்ததுவும் உம்பர்கோன் றன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கியையப் படுத்ததுவும்
அந்நா றெறிந்ததுவும் அன்பி னிரந்தததுவும்
பொன்னா வரையிலை காய் பூ

பாணற்குச் சொல்லுவதும் பைம்புனலை மூடுவதும்
தாணு வுரித்ததுவும் சக்கரத்தோன் ஊணதுவும்
எம்மானை யெய்துவது மீசனிடத்துஞ் சிரத்தும்
தைம்மாசி பங்குனி மாதம்

வண்ணங் கரியனென்றும் வாய் தேவநாரியென்றும்
கண்ணனிவனென்றுங் கருதாமல் மண்ணை
அடிப்பது மத்தாலே யளந்தானை யாய்ச்சி
அடிப்பது மத்தாலே யழ

சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை
ஐங்கரற்கு மாறுதலை யானதே சங்கைப்
பிடித்தோற்கு மாறுதலைப் பித்தனார் பாதம்
பிடித்தோர்க்கு மாறுதலை பார்.

நேற்றிரா வந்தொருவ னித்திரையிற் கைபிடித்தான்
வேற்றூரானென்று ......யென்றேன் ஆற்றியே
கஞ்சி குடியென்றான் களித்தின்று போவென்றேன்
வஞ்சியரே சென்றான் மறைந்து

தடக்கடலிற் பள்ளிகொள்வோ மதனைநற் சங்கரனார்
அடற்புலிக் குட்டிக் களித்தனரா மதுகேட்டு நெஞ்சில்
நடுக்கம் வந்துற்றது கைகாலெழா நளினத்தியென்னை
இடுக்கடி பாயைச்சுருட்டடி யேகடியம்பலத்தே

கரிக்காய் பொறித்தால் கன்னிக்காய் தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாயாப் பண்ணி உருக்கமுள்ள
அப்பைக்காய நெய்துவட்ட லாக்கினாள் அத்தை மகள்
உப்புக் காண் சீச்சீ உமி

கொட்டைப்பாக்கும் ஒரு கண் கூடையைப் பார்க்கும் மடியில்
பிட்டைப் பார்க்கும் பாகம் பெண்பார்க்கும் முட்டநெஞ்சே
ஆரணனு நாரணனு மாதிமறையுள் தேடும்
காரணனைக் கண்டு களிப்பாக்கு

செற்றவரை வென்ற திருமலைராயன் நகரத்தில்
வற்றிபுரியும் வாளே வீரவாள் மற்றையவாள்
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவாளி வாளா வாளாம்

முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே தொக்க
உமையாள் கண்ணொன்றரை மற்றூன் வேடன் கண்ணொனஅ
றமையு மிதனா லென்றறி

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்றன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்

அருந்தினா னண்டமெலா மன்று மாவீசன்
இருந்தபடி யேதென் றியம்பப் பொருந்திப்
பருங்கவளம் யானை கொளப் பாகன் தன் மீதே
இருந்தபடி யீசனிருந் தான்

தந்தை பிறந்திறவாத் தன்மையினாற் தன் மாமன்
வந்து பிறந்திருக்கும் வண்மையினால் முந்தொருநாள்
வீணிக்கு வேளையரித்தான் மகன் மாமன்
காணிக்கு வந்திருநதான் காண்.

காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர் தரும்
பாலனையுங் கொன்ற பழிபோமோ சீலமுடன்
நாட்டிலே வாழ்ந்திருக்கு நாதரே நீர் திருச் செங்
காட்டிலே வந்திருந்தக் கால்

பெருமாளு நல்ல பெருமா ளவர்தம்
திருநாளு நல்ல திருநாள் பெருமாளும்
இருந்திடத்திற் சும்மா இராமையினா லையோ
பருந்தெடுத்துப் போகிறதே பார்.

எட்டொருமா எண்காணி மீதே இருந்த கலை
பட்டொருமா னான்மாவிற் பாய்ந்ததே சிட்டர் தொழும்
தேவாதி தேவன் திருவத்தி யூருடையான்
மாவேறி வீதிவரக் கண்டு.

அப்பா குமரக் கோட்டக் கீரை செய்விலி மேட்
டுப்பாகற் காய்ப்பருத்திக் குளநீர் செப்புவா
சற்காற்றுக் கம்பத்தடியிற் றவங் கருமா
றிப் பாய்ச்சல் யார்க்கு மினிது

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால் கண் டஞ்சாமுன் விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகா முன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது

மன்னு மருணகிரி வாழ் சம்பந் தாண்டாற்குப்
பன்னுதலைச் சவரம் பண்ணுவதேன்-மின்னின்
இளைத்த விடை மாதரிவன் குடுமி பற்றி
வளைத் திழுத்துக் குட்டா மலுக்கு.

வாழ்த்து திருநாகை வாகன தேவடியாள்
பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் நேற்றுக்
கழுதை கெட்ட வண்ணான் கண்டேன் கண்டேனென்று
பழுதையெடுத் தோடிவந்தான் பார்.
ஞானசபை கனகசபை நர்த்தசபை
ஆனந்தக் கூடம் திருமூலட்டானம் பே
ரம்பலம் பஞ்சவாரண நாற்கோபுரம் பொற்
கம்ப மண்டபம் சிவகங்கை.

ஔவையார் பாடல்கள்

இட்டமுடன் என்றலையி லின்னபடி யென்றெழுதி
விட்டசிவனும் செத்துவிட்டானோ முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவனுக் கன்னாய்
நெஞ்சமே அஞ்சாதிரு

தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழமண்டலமே பெண்ணாவள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு.

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா

வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமை சொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர் முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே- நாணாமல்
பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக் கீச்சென்னும் கிளி

சுரதந்தனி லிளைத்த தோகை சுகிர்த
விரதந்தனி லிளைத்த மேனி நிரதம்
கொடுத் திளைத்த தாதா கொடுஞ்சுளிற் பட்ட
வடுத் தொளைத்த கல்லாபிராமம்

ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொருள் எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித் தாதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்திம் மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையா லெழுதானை யெஞ்ஞான்றும் பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளென்
றெற்றோ மற்றெற்றோ மற்றெற்று

வானமுளதால் மழையுளதால் மண்ணுலகில்
தானமுளதால் தயையுளதால் ஆனபொழு
தெய்த்தோ மிளைத்தோ மென்றே மாந்திருப்போரை
எற்றோ மற்றெற்றோ மற்றெற்று

பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக் கொட்டும் சேரமான்
வாராயென வழைத்த வாய்மை யிம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்

விரகரிருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் அரையதனிற்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று

நம்பனடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தைக்காம் வம்புக்காம்
கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் காவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்

கருங்குளவி சூரைத்தூ றீச்சங்கனி போல்
விருந்தினர்க்கொன் றீயாதான் வாழ்க்கை அரும்பகலே
இச்சித்திருந்த பொருள் தாயத்தால் கொள்வரென்
றெற்றோ மற்றெற்றோ மற்றெற்று

எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உள்ளீரம் பற்றாக் கிடையே போல் பெண்ணாவாள்
மெற்றொடி மாதர் புணைர்முலை மேற் சார்வாரை
எற்றோ மற்றெற்றோ மற்றெற்று

ஒரு கொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்க்
கரியுரிவைக் கங்காளை காளாய் பரியுடனே
கண்ணால வோலை கடிதெழுத வாராயேல்
தண்ணாண்மை தீர்ப்பன் சபித்து

பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளே யாமாகில்
கூறாமல் சன்னியாசம் கொள்

திங்கட் குடையுடைச் சேரனும சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தலிலே
சங்கொக்கவோர் குருத்தீன்று பச்சோலை சலசலத்து
நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே

சண்டாளி சூர்ப்பனகை தாடகை போல் வடிவு
கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே தொண்டர்
செருப்படி தான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.

ஏசியிடலின் இடாமையே நன்றெதிரிற்
பேசு மனையாளிற் பேய் நன்று நேசமிலா
வங்கணத்தி னன்று பெரிய பகை வாழ்வில்லாச்
சங்கடத்திற் சாதலே நன்று

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணுமே பெருங்கானிற்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்ற
தீரிரவு துஞ்சாதென் கண்

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத் தொருவர் பூர்த்தமலர்த்
தண்டாமரைத் திருவே தாதா கோடிக் கொருவர்
உண்டாயின் உண்டென் றறு.

உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்க
தள்ளி வழக்கதனை தான் பேசி எள்ளளவும்
கைக்கூலி வாங்கும் காலறுவான்றன் கிளையும்
எச்சமறு மென்றா லறு



(மேலும் வளரும்)